காங்கிரசிலிருந்து விலகினார் மூத்த தலைவர் கபில் சிபல் - சமாஜ்வாதி சார்பில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல்
May 25 2022 3:21PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் தலைமை மீது கடும் அதிருப்தியிலிருந்த மூத்த தலைவர் திரு. கபில் சிபல், அக்கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாடியில் இணைந்தார்.
காங்கிரசுக்கு தற்காலிக தலைமையின்றி நிரந்தர தலைமை வேண்டும், கட்சி சீரமைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருமதி. சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 அதிருப்தி தலைவர்களில் ஒருவராக திரு. கபில் சிபல் இருந்து வந்தார். தற்போது அவர் காங்கிரசிலிருந்து விலகி, திரு. அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியில் இணைந்துள்ளார். அத்துடன், சமாஜ்வாடி கட்சி சார்பாக உத்தரப்பிரதேச மாநிலங்களவை தேர்தலில் போட்டியிட திரு. கபில் சிபல் இன்று மனுத் தாக்கல் செய்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய திரு. கபில் சிபல், கடந்த 16-ம் தேதியே தனது ராஜினாமா கடிதத்தை, காங்கிரஸ் மேலிடத்திற்கு அனுப்பி வைத்துவிட்டதாக கூறினார்.