தற்போதைய சூழலில் கோதுமை ஏற்றுமதிக்கான தடையை நீக்க முடியாது - தடையை நீக்கினால் கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கே பயனளிக்கும் என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்
May 26 2022 12:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தற்போதைய சூழலில் கோதுமை ஏற்றுமதிக்கான தடையை நீக்க முடியாது என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டில் நடைபெற்ற உலக பொருளாதார மன்ற கூட்டத்தில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் பங்கேற்றார். அப்போது, பேசிய அவர், தற்போதைய சூழலில் கோதுமை ஏற்றுமதிக்கான தடையை நீக்க முடியாது என்றும் அவ்வாறு தடையை நீக்கினால் அது கள்ளச்சந்தை வியாபாரிகளுக்கே பயனளிக்கும் என்றும் கூறினார். அதே நேரத்தில் ஏழை நாடுகளுக்கு குறைந்த விலையில் கோதுமையை இந்தியா தொடர்ந்து வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.