நாடு முழுவதும் காலியாக உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும், 3 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஜூன் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் - தேர்தல் ஆணையம் அறிவிப்பு
May 26 2022 12:20PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள 3 மக்களவைத் தொகுதிகள், 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஜூன் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்றும், ஜூன் 26ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது.