நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பு எதிரொலி : சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை மாற்றியமைப்பது தாமதமாகும் என தகவல்
May 26 2022 1:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் பணவீக்கம் அதிகரிப்பதன் காரணமாக, சரக்கு மற்றும் சேவை வரி விகிதத்தை மாற்றியமைப்பது தாமதமாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது நாடு முழுவதும் 4 நிலைகளில் ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி வசூலிக்கப்படுகிறது. பல்வேறு பொருட்களுக்கு ஏற்ப 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம் மற்றும் 28 சதவீதம் என 4 நிலைகளில் பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டு வருகிறது. இந்த 4 நிலைகளை மாற்றியமைக்க, அதாவது 3 நிலைகளாக குறைக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் சில பொருட்களின் வரி விகிதத்தை அதிகரிக்கவும், சில பொருட்களின் விகிதத்தை குறைக்கவும் திட்டமிட்டு உள்ளது. ஆனால் தற்போது நாட்டின் பணவீக்கம் அதிகமாக உள்ளது. இதனால் இந்த ஜி.எஸ்.டி. விகித மாற்றியமைப்பு தாமதமாகும் வாய்ப்பு இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.