சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்ததாகப் புகார் : சி.பி.ஐ. அலுவலகத்தில் நேரில் ஆஜரானார் கார்த்தி சிதம்பரம்
May 26 2022 10:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சீனர்களுக்கு முறைகேடாக விசா பெற்று தந்த வழக்கில் காங்கிரஸ் எம்.பி. திரு. கார்த்தி சிதம்பரம், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று காலை நேரில் விசாரணைக்கு ஆஜரானார்.
சீனர்கள் சட்டவிரோதமாக இந்தியா வருவதற்கு 2010-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை, 260 விசாக்கள் வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. பல லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டு முறைகேடாக விசாக்கள் வழங்கியதாக சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. திரு. கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப்பதிவு செய்த சிபிஐ, கடந்த 17-ம் தேதி, அவர் தொடர்பான இடங்களில் சோதனை நடத்தியது. விசா முறைகேடு வழக்கில் திரு. கார்த்தி சிதம்பரம் மீது, சிபிஐ-யைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. விசா முறைகேடு தொடர்பான விசாரணைக்கு நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியதையடுத்து, திரு. கார்த்தி சிதம்பரம், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் இன்று காலை நேரில் ஆஜரானார்.