இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 500-ஐ தாண்டியது - மத்திய சுகாதாரத்துறை தகவல்
May 26 2022 1:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து 2 ஆயிரத்து 500-ஐ தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 628 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 44 ஆயிரத்து 820-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் வைரஸ் தொற்றுக்கு மரணமடைந்துள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 525-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 15 ஆயிரத்து 414 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 4 கோடியே 26 லட்சத்து 4 ஆயிரத்து 881 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், நேற்று ஒரேநாளில் 2 ஆயிரத்து 167 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 192 கோடியே 82 லட்சத்து 3 ஆயிரத்து 555 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.