2024-ம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாடற்ற விவசாயத்துக்கு மாற வேண்டும் : மாநிலங்களுக்கு மத்திய எரிசக்தித் துறை வலியுறுத்தல்
May 26 2022 1:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அனைத்து மாநிலங்களும், 2024-ம் ஆண்டுக்குள் டீசல் பயன்பாடற்ற விவசாயத்துக்கு மாற முயற்சிக்க வேண்டும் என்று மத்திய மின்சாரம் மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் திரு. ஆர்.கே.சிங் வலியுறுத்தியுள்ளார்.
மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்திய திரு. ஆர்.கே.சிங், எரிசக்தித் துறையில் மாற்றத்தை ஏற்படுத்த மாநில அளவிலான வழிகாட்டுதல் குழுக்களை அமைக்குமாறு கேட்டு கொண்டார். இந்த வழிகாட்டுதல் குழுக்கள் அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலாளர்கள் தலைமையின் கீழ் செயல்படும் என்று கூறினார். கரியமில வாயு உமிழ்வைக் குறைக்க ஆற்றல் மாற்றம் ஒன்றே சிறந்த வழி என்றும், அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்ய மின் உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சேர்க்க வேண்டும் என்றும் திரு. ஆர்.கே.சிங் வலியுறுத்தினார்.