நாக்பூரில் 4 குழந்தைகளுக்கு HIV பாதிக்கப்பட்டோரின் ரத்தம் ஏற்றப்பட்ட அவலம் - ஒரு குழந்தை உயிரிழந்ததால் பெரும் சர்ச்சை
May 26 2022 12:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூரில் 4 குழந்தைகளுக்கு HIV பாதிக்கப்பட்டோரின் ரத்தம் ஏற்றப்பட்ட அவலம் நடந்துள்ளது.
தலசீமியா என்னும் இரத்த அழிவுச் சோகை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு, நாக்பூர் அரசு மருத்துவமனையில் ரத்தம் ஏற்றப்பட்டது. இதில், 4 குழந்தைகளுக்கு HIV பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, 4 குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழந்ததையடுத்து, இச்சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சரியாக பரிசோதனை செய்யாமல், HIV தொற்றுள்ள ரத்தம், எவ்வாறு குழந்தைகளுக்கு ஏற்றப்பட்டது என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக, விசாரணை நடத்தப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மஹாராஷ்ட்ரா மாநில சுகாதாரத்துறையின் உதவி இயக்குநர் டாக்டர் ஆர்.கே. தாகேட் தெரிவித்துள்ளார்.