சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக எழுந்த புகார் - கர்நாடக காங்கிரஸ் தலைவர் சிவக்குமார் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
May 26 2022 1:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் திரு.சிவக்குமார் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
வரி ஏய்ப்பு மற்றும் சட்டவிரோத பண பரிவர்த்தனை தொடர்பாக கர்நாடக காங்கிரஸ் தலைவர் திரு.சிவக்குமாருக்கு எதிராக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது. மேலும் அவருக்கு சொந்தமான வீடுகள், தொழிற்சாலைகள் மற்றும் உறவினரின் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இதனிடையே, சட்டவிரோத பரிவர்த்தனை குற்றச்சாட்டில் வருமான வரித்துறை பதிவு செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், தற்போது ஜாமினில் உள்ளார். திரு. சிவக்குமார் மீதான குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத்துறை இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.