பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சியில் நாட்டில் வேலையின்மை அதிகரிப்பு - காங்கிரஸ் கட்சி விமர்சனம்
May 26 2022 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான 8 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.
பிரதமர் திரு. மோடி தலைமையிலான பா.ஜ.க.வின் 8 ஆண்டு ஆட்சி குறித்து விமர்சித்து, காங்கிரஸ் கட்சி ஆவணம் வெளியிட்டுள்ளது. காங்கிரசின் அதிபாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்த ஆவணத்தில், நல்ல நாட்கள் வரப்போகின்றன என பிரதமர் திரு. மோடி கூறிய நிலையில், பணக்காரர்களுக்கு மட்டுமே நல்ல நாட்கள் வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு, ஏழை-எளிய மக்களின் மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகால பா.ஜ.க. ஆட்சியில் நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.