இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,628 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி
May 26 2022 3:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 628 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 44 ஆயிரத்து 820-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18 பேர் தொற்றுக்கு மரணமடைந்துள்ளதாகவும், கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 525-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.