புதுச்சேரியில் நகராட்சி ஊழியரின் இருசக்கர வாகனத்தில் இருந்த ரூ.2 லட்சம் திருட்டு
May 26 2022 6:33PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் நகராட்சி ஊழியரின் இருசக்கர வாகனத்தில் இருந்து 2 லட்சம் ரூபாய் பணத்தை மர்ம நபர்கள் லாவகமாக திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.
புதுச்சேரி அடுத்த சாமிபிள்ளை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனியாண்டி. நகராட்சி ஊழியரான இவர், ரெட்டியார்பாளையத்தில் உள்ள வங்கியில் நகைகளை அடமானம் வைத்து, 2 லட்சத்து 19 ஆயிரம் பணத்தை வாங்கி கொண்டு, தனது இருசக்கரத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டு இருந்தார். அப்போது அங்கிருந்த பூ கடையின் முன்பு வாகனத்தை நிறுத்தி விட்டு, பூ வாங்க சென்றுள்ளார். அப்போது 2 இருசக்கர வாகனங்களில் வந்த மர்ம நபர்கள், பழனியாண்டியின் இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை எடுத்துக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்றனர். இது குறித்து ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.