போலி கிரிப்டோகரன்ஸி பரிமாற்றத்தின் மூலம் இந்தியர்கள் ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு - தனியார் சைபர் பாதுகாப்பு நிறுவனம் தகவல்
Jun 23 2022 1:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
போலி கிரிப்டோகரன்ஸி பரிமாற்றத்தின் மூலம் இந்தியர்கள் ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளதாக தனியார் சைபர் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலக அளவில் கிரிப்டோகரன்சியில் ஏராளமானோர் தங்கள் பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். இந்நிலையில் போலியான இணையத்தளங்கள் மூலம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்தவர்கள் தங்கள் பணத்தை இழந்துள்ளதாக தகவல் வெளியாகிவுள்ளது. போலி கிரிப்டோகரன்சி பரிமாற்றத்தின் காரணமாக இந்தியர்கள் ஆயிரம் கோடி ரூபாயை இழந்துள்ளதாக சைபர் பாதுகாப்பு நிறுவனமான CloudSEK தெரிவித்துள்ளது. போலியான கிரிப்டோகரன்சி இணையதளங்களை முதலீட்டாளர்கள் அடையாளம் கண்டு விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என CloudSEK நிறுவன நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.