குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்அனுமதியுடன் மாநிலங்களில் எம்.பி.க்கள் வாக்களிக்கலாம் : தேர்தல் ஆணையம்
Jun 23 2022 2:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்அனுமதியுடன் மாநிலங்களில் எம்.பி.க்கள் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
குடியரசுத் தலைவர் தேர்தலில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவை எம்.பி.க்கள், டெல்லியில் நாடாளுமன்றத்தில் அறை எண். 63-ல் வாக்களிக்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. ஆனால் தவிர்க்க முடியாத காரணங்களால் டெல்லியில் இருந்து ஓட்டு போட முடியாத எம்.பி.க்கள், தேர்தல் ஆணையத்திற்கு ஒரு படிவத்தை நிரப்பி அனுப்பி முன் அனுமதி பெற்று, மாநில சட்டசபைகளில், யூனியன் பிரதேச வாக்குச்சாவடிகளில் வாக்களிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு மாநில சட்டசபைகளில் வாக்களிக்க விரும்புவோர், முன் அனுமதி பெறுவதற்கு வாக்குப்பதிவு நாளுக்கு 10 நாட்களுக்கு முன்பாக தேர்தல் ஆணையத்திற்கு விண்ணப்பித்து அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து எம்.பி.க்களுக்கும் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.