புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களின் தலைமுடியை சீர்செய்து வரும் தலைமை ஆசிரியர்
Jun 23 2022 3:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில், அரசுப் பள்ளி மாணவர்களை ஒழுங்குபடுத்தும் முயற்சியாக, மாணவர்களின் தலைமுடியை சீர்செய்து வரும் தலைமை ஆசிரியரின் செயலுக்கு பெற்றோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியை அடுத்த தமிழகப் பகுதியான கண்டமங்கலம் வள்ளலார் அரசு மேல்நிலைப்பள்ளியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு மாணவர்கள் சிலர் ஒழுங்கீனமாகவும், தலைமுடியை அதிக அளவில் வைத்திருந்ததாலும், மாணவர்களின் செயல்பாடுகள் குறித்து பெற்றோரிடம் தலைமை ஆசிரியர் ஜேவியர் சந்திரகுமார் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, தலைமுடியை அதிகம் வைத்திருந்த மாணவர்களுக்கு கத்திரிக்கோல் கொண்டு முடியை சீர்செய்து, தேங்காய் எண்ணெய் கொடுத்து தலைவாரி அனுப்பி வைக்கிறார். இதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், அதுகுறித்து விளக்கமளித்து, தலைமையாசிரியர்கள் ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். மேலும், போதைப்பழக்கத்தில் இருந்த மாணவர்களை இனம்கண்டு அவர்களுக்கு போலீசார் உதவியுடன் கவுன்சிலிங் கொடுத்துள்ளார்.