நிலமோசடி வழக்கு - சிவசேனா நாடாளுமன்ற தலைவர் சஞ்சய் ராவத் இன்று ஆஜர்
Jul 1 2022 10:24AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிவசேனா நாடாளுமன்ற தலைவர் திரு. சஞ்சய் ராவத், இன்று மதியம் 12 மணிக்கு விசாரணை முகமை முன்பு ஆஜராக உள்ள நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்தில் கட்சி தொண்டர்கள் ஒன்று கூட வேண்டாம் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மும்பை கோரேகாவ் பகுதியில் பத்ரா குடிசை சீரமைப்பு பணியில் ஈடுபட்ட நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், அதில், 100 கோடி ரூபாயை சஞ்சய் ராவத் குடும்பத்தினர் உள்ளிட்ட பலரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியதாகவும் கூறப்பட்ட புகாரின் பேரில், அமலாக்கத்துறை விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.