பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிப்பு : இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறைய வாய்ப்பு
Jul 1 2022 2:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதிக்கு மத்திய அரசு கூடுதல் வரி விதித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், பெட்ரோல் ஏற்றுமதிக்கு கூடுதலாக 6 ரூபாயும், டீசல் ஏற்றுமதிக்கு கூடுதலாக 13 ரூபாயும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் ஒரு டன் கச்சா எண்ணெய்க்கு 294 டாலர் வரி விதிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல். டீசல் ஏற்றுமதிக்கு வரி விதிக்கப்பட்டுள்ளதால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.