மஹாராஷ்ட்ராவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் -இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை
Jul 5 2022 1:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்ட்ராவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மஹாராஷ்ட்ரா மாநிலம் மும்பையில் நள்ளிரவு முதல் பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. கந்தேஷ்வர் ரயில் நிலைய சுரங்கபாதையில் தேங்கிய மழை நீரால் பயணிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சியோன் உள்ளிட்ட பகுதிகளில், இன்று காலை நிலவரப்படி சுமார் 10 சென்டி மீட்டர் மழை பதிவானது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. மும்பையில் புறநகர் ரயில் சேவையும், சாலைப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளை வேகமாக மேற்கொள்ள முதலமைச்சர் திரு. ஏக்நாத் ஷிண்டே உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனிடையே மஹாராஷ்ட்ராவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.