தெலங்கானாவில் வங்கி லாக்கரை உடைத்து 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் கொள்ளை - தனி காவல் படை அமைத்து போலீசார் தேடுதல் வேட்டை
Jul 5 2022 2:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானாவில் வங்கி லாக்கரை உடைத்து பாதுகாப்பு அலாரத்தின் இணைப்பை துண்டித்து 4 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்துள்ளனர். கொள்ளையர்களை 3 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் உள்ள கிராமிய வங்கியில் நுழைந்த கொள்ளையர்கள், வங்கியின் பூட்டை உடைத்து உள்ளே சென்று, சிசிடிவி கேமராக்களை சேதப்படுத்தி, பின்பு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் பாதுகாப்பு அலாரத்தின் இணைப்பை துண்டித்து, லாக்கரை உடைத்து நகைகளை அள்ளிச்சென்றுள்ளனர். 8 கிலோவுக்கும் அதிகமான தங்கம் கொள்ளையடிக்கப்படுள்ளதாகவும், அதன் மதிப்பு 4 கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, லாக்கரை உடைக்க கேஸ் கட்டர் பயன்படுத்தப்பட்டபோது, 7 லட்சம் ரூபாய் பணம் தீயில் எரிந்து சாம்பலானதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நிஜாமாபாத் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.