டெல்லியில் நாளை நடைபெறுவதாக இருந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் மீண்டும் 3-வது முறையாக ஒத்திவைப்பு - அடுத்தக்‍ கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்‍கப்படும் என தகவல்

Jul 5 2022 5:16PM
எழுத்தின் அளவு: அ + அ -

டெல்லியில் நாளை நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணையக்‍கூட்டம் மீண்டும் 3வது முறையாக ஒத்திவைக்‍கப்பட்டுள்ளது.

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் கடந்த மாதம் 17-ம் தேதி மற்றும் 23-ம் தேதிகளில் நடைபெறாமல் ஒத்திவைக்‍கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தக்கூட்டம் , டெல்லியில் நாளை காலை நடைபெறும் என்றும், மேகதாது உள்ளிட்ட விவகாரங்கள் இந்தக்‍கூட்டத்தில் விவாதிக்‍கப்படும் எனவும் முதலில் தகவல் வெளியானது.

இந்நிலையில், நாளை நடைபெறுவதாக இருந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், மீண்டும் 3வது முறையாக ஒத்திவைக்‍கப்பட்டுள்ளது. தவிர்க்‍க முடியாத காரணங்களால் கூட்டம் ஒத்திவைக்‍கப்படுவதாகவும், அடுத்தக்‍கூட்டம் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக பின்னர் அறிவிக்‍கப்படும் என்றும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00