டெல்லியில் நாளை நடைபெறுவதாக இருந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம் மீண்டும் 3-வது முறையாக ஒத்திவைப்பு - அடுத்தக் கூட்டம் நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தகவல்
Jul 5 2022 5:16PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் நாளை நடைபெறுவதாக இருந்த காவிரி மேலாண்மை ஆணையக்கூட்டம் மீண்டும் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் கடந்த மாதம் 17-ம் தேதி மற்றும் 23-ம் தேதிகளில் நடைபெறாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்தக்கூட்டம் , டெல்லியில் நாளை காலை நடைபெறும் என்றும், மேகதாது உள்ளிட்ட விவகாரங்கள் இந்தக்கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனவும் முதலில் தகவல் வெளியானது.
இந்நிலையில், நாளை நடைபெறுவதாக இருந்த காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் கூட்டம், மீண்டும் 3வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிர்க்க முடியாத காரணங்களால் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாகவும், அடுத்தக்கூட்டம் எப்போது நடைபெறும் என்பது தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும் என்றும், காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.