மியான்மர் எல்லைப் பகுதியில் தமிழர்கள் 2 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை - இருவரது உடல்களையும் தாயகம் கொண்டுவர மத்திய அரசு நடவடிக்கை

Jul 6 2022 12:44PM
எழுத்தின் அளவு: அ + அ -

மியான்மர் நாட்டின் தமு எல்லைப் பகுதியில் தமிழர்கள் 2 பேரை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியா - மியான்மர் எல்லையான மணிப்பூரின் மோரே பகுதியில் மோகன், அய்யனார் என்ற இரு தமிழர்கள் வசித்து வந்தனர். ஆட்டோ ஓட்டுநரான மோகனும், சிறிய கடை ஒன்றை நடத்திவந்த அய்யனாரும் அண்மையில் மியான்மருக்கு சென்றனர். அவர்களை இரு சக்கர வாகனத்தில் வந்த 2 பேர் பிடித்துச் சென்றதாகவும், இருவரையும் தலையில் துப்பாக்கியால் சுட்டு கொடூரமாக கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. மியான்மர் எல்லையான தமு என்ற பகுதியில் இருவரின் சடலமும் நேற்று மீட்கப்பட்டுள்ளது. தமிழர்கள் இருவரையும் மியான்மரில் செயல்பட்டுவரும் 'பியூ ஷா தீ' என்னும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுவினர் படுகொலை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட தமிழர்கள் இருவரின் உடல்களும் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. மியான்மர் ராணுவ அரசை தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டுள்ள மத்திய அரசு, இருவரின் உடல்களை தாயகம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00