ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் கையெறி குண்டு தாக்குதல்- பீகார் மாநில தொழிலாளி உயிரிழப்பு, படுகாயம் அடைந்த இருவருக்கு சிகிச்சை
Aug 5 2022 8:10AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் பீகார் மாநில தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
புல்வாமா மாவட்டத்தில் உள்ள கதூரா கிராமத்தில் வெளியூர் தொழிலாளர்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இறந்த தொழிலாளி பீகாரின் சக்வா பராஸ் பகுதியைச் சேர்ந்த முகமது மும்தாஜ் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காயமடைந்த பீகாரைச் சேர்ந்த முகமது ஆரிப் மற்றும் முகமது மக்பூல் ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.