கேரளாவில் கொட்டித்தீர்க்‍கும் கனமழைக்‍கு 19 பேர் உயிரிழப்பு -வரும் 8-ம் தேதி வரை கனமழை நீடிக்‍கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

Aug 5 2022 11:14AM
எழுத்தின் அளவு: அ + அ -

கேரளாவில் கொட்டித்தீர்க்‍கும் கனமழைக்‍கு 19 பேர் பலியாகிவுள்ள நிலையில், வரும் 8-ம் தேதி வரை கனமழை நீடிக்‍கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தீவிரமடைந்துள்ள தென்மேற்கு பருவ மழையால், நீர் நிலைகள் நிரம்பி பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டுள்ளது. மத்திய மற்றும் வடக்கு கேரள மாவட்டங்களில் ஆற்றங்கரையோரம் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் தற்போது பெய்து வரும் கனமழை வரும் 8-ம் தேதி வரை நீடிக்‍கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தநிலையில், கோழிக்கோடு விமான நிலையப் பகுதியில் நிலவிய மோசமான வானிலை காரணமாக, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்த 5 விமானங்கள் கொச்சி விமான நிலையத்துக்கு திருப்பிவிடப்பட்டன. கனழையால் சில இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, கேரளாவில் பெய்து வரும் கனமழைக்‍கு கடந்த 5 நாட்களில் 19 பேர் பலியானதாக தெரிவிக்‍கப்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00