ரெப்போ வட்டி விகிதத்தை பூஜ்ஜியம் புள்ளி 5 சதவிகிதம் உயர்த்தியது ரிசர்வ் வங்கி - ரெப்போ வட்டி அதிகரிப்பால் வீடு, தனிநபர், வாகன கடனுக்கான வட்டி விகிதம் உயரும்
Aug 5 2022 11:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 5 சதவீதம் உயர்த்தப்பட்டு 5 புள்ளி 4 பூஜ்ஜியம் சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன்மூலம் வீட்டுக்கடன், வாகன கடன் உள்ளிட்டவை மீதான வட்டி விகிதம் மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை தொடர்பாக ஆளுநர் திரு. சக்தி காந்த தாஸ் இன்று முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடனான ரெப்போ வட்டி விகிதம் பூஜ்ஜியம் புள்ளி 5 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம், கடந்த ஜூன் மாதம் ஏற்கனவே பூஜ்ஜியம் புள்ளி 5 சதவீதம் அதிகரிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதம் 5 புள்ளி 4 பூஜ்ஜியம் சதவீதமாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் வீட்டுக்கடன், வாகன கடன் மற்றும் தனிநபர் கடன் வட்டி விகிதம் மேலும் உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய பங்குச்சந்தைகளில் நிலையற்றத்தன்மை காணப்படுவதாகவும், பணவீக்கம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்த திரு. சக்தி காந்த தாஸ், பணவீக்க உயர்வே வட்டி விதிக அதிகரிப்புக்கு காரணம் என்று குறிப்பிட்டார்.