அமலாக்கத்துறை, சிபிஐ உள்ளிட்ட சுதந்திரமான அமைப்புகள் அனைத்தும் மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஆதரவாக செயல்படுகின்றன - காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பரபரப்பு புகார்
Aug 5 2022 11:51AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டில் ஜனநாயகம் என்பதே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், சர்வாதிகார ஆட்சி நடைபெறுவதாகவும் காங்கிரஸ் எம்.பி. திரு. ராகுல்காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பல நூற்றாண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்ட அமைப்புகள் நம் கண் முன்னே அடித்து நொறுக்கப்படுவதாக குறிப்பிட்டார். சர்வாதிகார ஆட்சியை எதிர்ப்பவர்கள் சிறைகளில் அடைக்கப்படுவதாகவும், நாடாளுமன்றத்தில் எந்த விவாதத்தையும் நடத்த மத்திய அரசு தயாராக இல்லை எனவும் அவர் விமர்சித்தார். இந்தியாவில் உள்ள 3 பெரும் பணக்காரர்களுக்காக சர்வாதிகார ஆட்சி நடைபெறுவதாக திரு. ராகுல்காந்தி வேதனை தெரிவித்தார். வேலை வாய்ப்பின்மை தலைவிரித்து ஆடுவதாகவும், அனைத்து பொருட்களின் விலையும் பல மடங்கு உயர்ந்து இருப்பதாகவும் ராகுல் காந்தி சுட்டிக்காட்டினார்.