புதுச்சேரியில் இருசக்கர வாகனங்களில் பெட்டியை உடைத்து பணம் திருட்டு : ஓய்வு நேரத்தில் திருட்டில் ஈடுபட்ட தலைமைக் காவலர் கைது

Aug 5 2022 12:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரியில் நிறுத்தப்பட்டிருக்கும் இருசக்கர வாகனங்களில் பெட்டியை உடைத்து பணம் திருடிய காவல்துறை தலைமைக் காவலரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சேரி நகர பகுதி மற்றும் சுற்றுலா பகுதிகளில் நிறுத்தப்படும் மொபட் வண்டியில் பெட்டியை உடைத்து அதில் இருக்கும் பணத்தை திருடி செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது. கேண்டீன் வீதியில், மகேஸ்வரி என்பவரின் மொபட் வண்டியின் பெட்டியை உடைத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் திருட்டு போனது. இது குறித்து பெரியகடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நகர பகுதியில், சிறப்பு அதிரடிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாரதி பூங்கா அருகில் சந்தேகப் படும்படியாக சுற்றித் திரிந்த நபரை பிடித்து விசாரித்தனர். அவரை காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருபுவனை கலித்தீர்த்தாள் குப்பம் பகுதியை சேர்ந்த காளிதாஸ் என்பதும், புதுச்சேரி காவல்துறையில் தலைமை காவலராக பணியாற்றி வருவதும், பணி முடிந்த பின்னர் வீட்டிற்கு செல்லாமல் சுற்றுலா பகுதிக்கு சென்று, வாகன நிறுத்தும் இடங்களில் நோட்டமிட்டு மொபட் வண்டி பெட்டியை உடைத்து, பணத்தை திருடுவது தெரியவந்தது. ஆன்லைன் ரம்மி விளையாட போலீஸ் பணியை முடித்து விட்டு, ஓய்வு நேரத்தில் திருட்டு வேலையில் தலைமை காவலர் ஈடுபட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00