மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீர் : வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதி
Aug 6 2022 9:59AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட உபரிநீரால் ஏராளமான வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் எடப்பாடி அடுத்த காவிரி கரை பகுதியில் உள்ள சாலைகளில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும், காவேரிப்பட்டி, மந்தியான்திட்டு அக்ரஹாரம், பூலாம்பட்டி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட வீடுகளில் வெள்ளநீர் புகுந்தது. இதனால், வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.