கேரளாவில் கூகுள் மேப் காட்டிய வழியில் சென்று ஓடைக்குள் இறங்கிய கார் : காரில் இருந்த 4 பேரையும் பத்திரமாக மீட்ட கிராம மக்கள்
Aug 6 2022 3:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் கூகுள் மேப் காட்டிய வழியில் பயணம் செய்த கார் ஒன்று ஓடைக்குள் இறங்கியது.
கேரளா மாநிலம் கும்பநாடு பகுதியைச் சேர்ந்த 4 பேர், எர்ணாகுளத்தில் இருந்து நேற்று இரவு ஊருக்கு காரில் நள்ளிரவில் பயணம் செய்து கொண்டிருந்தனர். கூகுள் மேப்பை பயன்படுத்தி ஓட்டுநர் காரை ஓட்டி உள்ளார். கூகுள் மேப் காட்டிய வழியில் சென்ற கொண்டிருந்த போது திடீரென சாலை முடிந்தது. ஓட்டுநர் சுதாரித்து பிரேக் போடுவதற்குள் கார் நேராக, ஓடையில் இறங்கியது. அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடிச் சென்று காரில் இருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டனர். மழை காரணமாக கூகுள் மேப்பால் வழிதடத்தை சரியாக காட்ட முடியவில்லை என மக்கள் தெரிவித்தனர்.