வாரத்தின் முதல் வர்த்தக நாள் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கின
Aug 8 2022 11:43AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் தொடங்கின.
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது, 121 புள்ளிகள் சரிந்து 58 ஆயிரத்து 267 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை நிஃப்டி, 38 புள்ளிகள் குறைந்து 17 ஆயிரத்து 360 புள்ளிகளாகவும் இருந்தன. அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 79 ரூபாய் 46 காசாக இருந்தது. இந்நிலையில், தற்போது நடைபெற்று வரும் வர்த்தகத்தில் பங்குச்சந்தைகளில் உயர்வு காணப்படுகிறது.