இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,167 பேருக்கு புதிதாக தொற்று உறுதி : கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் மரணம்
Aug 8 2022 11:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 16 ஆயிரம் என்ற அளவுக்கு குறைந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 167 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 61 ஆயிரத்து 899-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 41 பேர் வைரஸ் தொற்றுக்கு மரணமடைந்துள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 730-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 1 லட்சத்து 35 ஆயிரத்து 510 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 4 கோடியே 34 லட்சத்து 99 ஆயிரத்து 659 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், நேற்று ஒரேநாளில் 15 ஆயிரத்து 549 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 206 கோடியே 56 லட்சத்து 54 ஆயிரத்து 741 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.