பதவியிலிருந்து ஓய்வு பெறும் குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவுக்கு பிரிவு உபச்சார விழா - 5 ஆண்டு சேவையை பாராட்டி நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புகழாரம்
Aug 8 2022 12:32PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடும் உழைப்பு மற்றும் விடாமுயற்சி மூலம் அனைத்து பொறுப்புகளையும் சிறப்பாக கையாண்டவர் குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கய்யா நாயுடு என்று பிரதமர் திரு.மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் திரு. வெங்கய்யா நாயுடுவின் பதவிக்காலம் நாளை மறுதினத்துடன் நிறைவு பெறுகிறது. இதனையொட்டி, நாடாளுமன்ற மாநிலங்களலையில் நடைபெற்ற பிரிவு உபச்சார விழாவில் திரு. வெங்கய்யா நாயுடுவுக்கு பிரதமர் திரு. மோடி புகழாரம் சூட்டினார். பா.ஜ.க. தலைவராக, எம்.பியாக, மத்திய அமைச்சராக, குடியரசுத் துணைத் தலைவராக என திரு.வெங்கய்யா நாயுடு அனைத்து பொறுப்புகளிலும் திறம்பட செயல்பட்டதாக தெரிவித்தார். திரு.வெங்கய்யா நாயுடுவுக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருப்பதாகவும், மாநிலங்களவைக்கு இது மிகவும் உணர்ச்சிப்பூர்வமான தருணம் என்றும் பிரதமர் கூறினார். திரு.வெங்கய்யா நாயுடுவின் வாதங்களில் நேர்மையும் இருக்கும், கம்பீரமும் இருக்கும் என்று தெரிவித்தார். எந்த சூழ்நிலையிலும் திறம்பட செயலாற்றும் திறன் படைத்தவர் திரு. வெங்கய்யா நாயுடு என்றும், இளைஞர்களுடன் திரு.வெங்கய்யா நாயுடுவுக்கு நல்ல புரிதல் உள்ளதாகவும், இளைஞர்களுக்கு உத்வேகம் ஊட்டுவதாக அவரின் வாழ்க்கை அமைந்துள்ளதாகவும் பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டார்.