இறுதி வாரத்தை எட்டிய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் : முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டம்
Aug 8 2022 1:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் இறுதி வாரத்தை எட்டியுள்ள நிலையில் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் 18-ம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடரில், விலைவாசி, பணவீக்கம், வேலையின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருவதால், இரு அவைகளின் அலுவல்களும் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றன. முன்னதாக, அமளியில் ஈடுபட்ட காரணத்திற்காக இரு அவைகளிலும் சேர்த்து 27 எம்.பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில், கூட்டத்தொடர் இறுதி வாரத்தை எட்டியுள்ளதால், முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்வதில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.