மத்திய பா.ஜ.க. ஆட்சியில் 20 கோடி பேருக்கு வேலையில்லை : புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
Aug 9 2022 3:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய பா.ஜ.க. ஆட்சியில் 20 கோடி பேருக்கு வேலையில்லை என்றும், 23 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் திரு.நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய பா.ஜ.க அரசை கண்டித்தும், புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசை கண்டித்தும் அம்மாநில மாநில காங்கிரஸ் சார்பில் பாதயாத்திரை நடைபெற்றது. மாநில காங்கிரஸ் தலைவர் திரு.ஏ.வி. சுப்பிரமணியன், முன்னாள் முதலமைச்சர் திரு.நாராயணசாமி ஆகியோர் தலைமையில் பாத யாத்திரையில்
200க்கும் மேற்பட்ட காங்கிரஸார் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திரு.நாராயணசாமி,
அரிசி, கோதுமை, பால், தயிர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி போடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.