காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா தொற்று - ராகுல் காந்திக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் ராஜஸ்தானில் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி ரத்து
Aug 10 2022 12:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி. பிரியங்கா காந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 2 மாத இடைவெளியில் அவர் கொரோனா பாதிப்புக்கு மீண்டும் ஆளாகியுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்திக்கு கடந்த ஜூன் மாதம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட போது, அவரது மகளான திருமதி. பிரியங்கா காந்திக்கும் லேசான அறிகுறியுடன் கொரோனா கண்டறியப்பட்டது. இந்நிலையில், திருமதி. பிரியங்கா காந்திக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் பதிவு வெளியிட்டுள்ள அவர், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இதனிடையே, திரு. ராகுல் காந்திக்கும் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை பாதிப்பையடுத்து, ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் இன்று மேற்கொள்ளவிருந்த பயணத்தை திரு. ராகுல் காந்தி ஒத்திவைத்துள்ளார்.