பீகார் சட்டசபை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு நிதிஷ்குமார் நம்பிக்கை துரோகம் : பாரதிய ஜனதா ஆவேசம்
Aug 10 2022 12:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பீகார் சட்டசபை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்புக்கு திரு. நிதிஷ்குமார் நம்பிக்கை துரோகம் செய்துள்ளதாக பாரதிய ஜனதா விமர்சித்துள்ளது.
பீகாரில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்திவந்த முதலமைச்சர் திரு. நிதிஷ் குமார், கூட்டணி முறிவை நேற்று அறிவித்து, ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து இன்று புதிய அரசை அமைக்கிறார். இதனை பீகார் மாநில பா.ஜ.க. தலைவர் திரு.சஞ்சய் ஜெய்ஸ்வால் கடுமையாக விமர்சித்துள்ளார். 2020 சட்டசபை தேர்தலில் மக்கள் அளித்த ஆணைக்கு ஐக்கிய ஜனதாதளம் கட்சி நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாகவும், இதற்காக பீகார் மக்களால் திரு. நிதிஷ் குமார் தண்டிக்கப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.