ஜம்மு-காஷ்மீரில் 30 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு கண்டுபிடிப்பு : பாதுகாப்பான இடத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு செயலிழப்பு
Aug 10 2022 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீரில் 30 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை போலீசார் கைப்பற்றி செயலிழக்க செய்தனர்.
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கிடைத்த உளவு தகவல் அடிப்படையில், பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் மண்டல போலீசார் இணைந்து தீவிர சோதனை நடத்தினர். இதில், சர்குலர் சாலையில் தஹாப் பகுதியருகே 25 கிலோ முதல் 30 கிலோ எடை கொண்ட சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை போலீசார் கைப்பற்றினர். பின்னர் அதனை தனியான ஒரு பகுதிக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக செயலிழக்க செய்தனர்.