இந்தியாவில் இன்று 16,047 பேருக்கு புதிதாக தொற்று உறுதி : கடந்த 24 மணி நேரத்தில் 54 பேர் மரணம்
Aug 10 2022 12:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை நேற்று 13 ஆயிரத்துக்கு கீழ் இருந்த நிலையில் இன்று 16 ஆயிரத்தை கடந்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 47 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பு மொத்த எண்ணிக்கை 4 கோடியே 41 லட்சத்து 90 ஆயிரத்து 697-ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 54 பேர் வைரஸ் தொற்றுக்கு மரணமடைந்துள்ளதாகவும், இதன் மூலம் கொரோனா மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 826-ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. 1 லட்சத்து 28 ஆயிரத்து 261 பேர் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை 4 கோடியே 35 லட்சத்து 35 ஆயிரத்து 610 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளதாகவும், நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 539 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 8 மணி நிலவரப்படி, நாடு முழுவதும் 207 கோடியே 3 லட்சத்து 71 ஆயிரத்து 204 டோஸ் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.