கார்பேவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியது மத்திய அரசு - 2 தவணை தடுப்பூசி போட்டவர்கள் பூஸ்டர் செலுத்திக் கொள்ள அனுமதி
Aug 10 2022 1:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள், கார்பேவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகளை செலுத்தி கொண்டவர்கள், எந்த தடுப்பூசியை முதல் 2 டோஸ்களாக செலுத்தி கொண்டார்களோ, அதனையே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாகவும் செலுத்தி கொள்கின்றனர்.
இதனிடையே, கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசிகளில் எந்த தடுப்பூசியை 2 டோஸ்கள் செலுத்தி இருந்தாலும், செலுத்தி 6 மாதங்கள் ஆனவர்கள், கார்பேவேக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஹைதராபாத்தில் உள்ள பயாலஜிக்கல்-இ நிறுவனம் தயாரித்துள்ள கார்பேவேக்ஸ் தடுப்பூசியை 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் பூஸ்டர் டோஸாக செலுத்தி கொள்ளலாம் என தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப அறிவுறுத்தலுக்கான கொரோனா பணிக்குழு, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது. பரிந்துரையின் பேரில் மத்திய அரசு தற்போது ஒப்புதல் அளித்துள்ளது.