குடியரசுத் துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்பு- டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்
Aug 11 2022 6:47AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று பதவியேற்க உள்ளார்.
நாட்டின் 14-வது குடியரசுத் துணைத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்ட ஜெகதீப் தன்கர் வெற்றிபெற்றார். இந்நிலையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜெகதீப் தன்கர் இன்று முறைபடி பதவியேற்க உள்ளார். டெல்லியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஜெகதீப் தன்கருக்கு பதவிப்பிரமாணம் செய்துவைக்கிறார்.