நுபுர் சர்மா மீது நாடு முழுவதும் பதிவுச் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் டெல்லிக்கு மாற்றம் - டெல்லி காவல்துறை விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
Aug 11 2022 1:30PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மா மீது நாடு முழுவதும் பதிவுச் செய்யப்பட்ட வழக்குகளை டெல்லிக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நபிகள் நாயகம் குறித்து அவதூறான கருத்துகளை பேசிய பாஜக முன்னாள் செய்தித்தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு எதிராக நாடு முழுவதும் வழக்குகள் பதிவுச் செய்யப்பட்டன. நாடு முழுவதும் தனக்கு எதிராகப் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற வேண்டும் என்றும், மற்ற மாநிலங்களில் தன்மீது பதியப்பட்ட வழக்குத் தொடர்பாக கைது செய்யக்கூடாது எனவும் நுபுர் சர்மா உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நுபுர் சர்மா கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள் அவருக்கு எதிராக நாடு முழுவதும் பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் ஒரே இடத்தில் கொண்டுவரும் பொருட்டு டெல்லிக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்தனர்.