பீகார் மாநில முதலமைச்சராக 8-வது முறையாக மீண்டும் பதவி ஏற்றார் ​நிதிஷ்குமார் - துணை முதலமைச்சராக தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்பு

Aug 11 2022 1:29PM
எழுத்தின் அளவு: அ + அ -

பீகார் முதலமைச்சராக திரு. நிதிஷ் குமாரும், துணை முதலமைச்சராக திரு. தேஜஸ்வி யாதவும் பதவியேற்றுக் கொண்டனர்.

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக ஐக்கிய ஜனதாதளம் தலைவர் திரு. நிதிஷ்குமார் அறிவித்தார். இதையடுத்து பீகார் ஆளுநர் திரு. பகு செளஹானை நேரில் சந்தித்து பதவி விலகல்கடிதத்தை திரு. நிதிஷ் குமார் வழங்கினார். சிறிது நேரத்தில் ஆளுநர் திரு. பகு செளஹானை மீண்டும் சந்தித்த திரு. நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சியமைக்‍க உரிமை கோரினார். அவருக்‍கு ராஷ்டிரிய ஜனதா தளத்தின் 79 எம்.எல்.ஏக்கள், ஐக்கிய ஜனதா தளத்தின் 45 எம்.எல்.ஏக்கள், காங்கிரசின் 19 எம்.எல்.ஏக்கள், 16 இடதுசாரி எம்.எல்.ஏக்கள் என மொத்தம் 164 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

இதையடுத்து, பாட்னாவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பீகார் முதலமைச்சராக 8-ம் முறையாக திரு. நிதிஷ் குமார் பதவியேற்றார். துணை முதலமைச்சராக ராஷ்ட்ரிய ஜனதாதளத்தின் தலைவரும், திரு. லாலுவின் மகனுமான திரு. தேஜஸ்வி யாதவ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00