உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக யு.யு. லலித் நியமனம் - குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவு
Aug 11 2022 1:27PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள என்.வி. ரமணாவின் பதவிக்காலம் வரும் 26-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை நியமிக்குமாறு மத்திய சட்டத்துறை அமைச்சகத்துக்கு திரு. என்.வி.ரமணா பரிந்துரை செய்தார். இந்நிலையில், உச்சநீதிமன்றத்தின் 49-வது தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித்தை நியமித்து குடியரசுத் தலைவர் திருமதி. திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக உதய் உமேஷ் லலித், வரும் 27-ம் தேதி பொறுப்பேற்கவுள்ளார். அவர் நவம்பர் 8-ம் தேதி வரை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியில் இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.