சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் விழா இன்று கொண்டாட்டம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Aug 11 2022 11:19AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படும் ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திருமதி முர்மு, பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரக்ஷா பந்தன் பண்டிகை இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் மிகப் பழமையான பண்டிகைகளில் ஒன்றான ரக்ஷா பந்தன் நாளில் சகோதரிகள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டி, சகோதரத்துவத்தைக் கொண்டாடி மகிழ்கின்றனர். இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் ரக்ஷா பந்தன் பண்டிகையையொட்டி குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர் வெளியிட்ட டுவிட்டரில், மகிழ்ச்சி பொங்கும் ரக்ஷாபந்தன் நாளில் மக்கள் அனைவரும் சமுதாயத்தில் நல்லிணக்கத்தை மேம்படுத்த வேண்டும் என்றும், பெண்களை மதிக்கும் போக்கு அதிகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரதமர் திரு. மோடியின் டுவிட்டர் பதிவில், ரக்ஷா பந்தன் திருநாளை முன்னிட்டு நாட்டு மக்கள் அனைவருக்கும் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.