காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் - ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம்
Aug 11 2022 11:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.
காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் இருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ராணுவ முகாம் மீது 2 தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்த நிலையில், 2 வீரர்கள் காயமடைந்தனர். தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய 2 தீவிரவாதிகளும் பலியாகினர். இத்தாக்குதலைத் தொடர்ந்து ரஜோரி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தீவிரவாதிகள் வேறு எங்கும் பதுங்கி உள்ளனரா என தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. தீவிரவாத முகாம் மீதான தற்கொலை படை தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.