நாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் இன்று பதவியேற்பு - ராஷ்டிரபதி பவனில் நடைபெறும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்
Aug 11 2022 12:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்திய திருநாட்டின் 14-வது குடியரசு துணைத் தலைவராக திரு. ஜகதீப் தன்கர் இன்று பதவியேற்கிறார்.
குடியரசுத் துணைத் தலைவர் திரு.வெங்கையா நாயுடுவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, புதிய குடியரசுத் துணைத் தலைவரை தேர்ந்தெடுக்க கடந்த 6-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. பா.ஜ.க. கூட்டணி சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் திரு.ஜெகதீப் தன்கரும், எதிர்க்கட்சிகளின் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் திரு. மார்கெரட் ஆல்வாவும் போட்டியிட்டனர். இதில், திரு. ஜகதீப் தன்கர் வெற்றி பெற்றார். இதையடுத்து, திரு.ஜெகதீப் தன்கர், குடியரசு துணைத் தலைவராக இன்று முறைப்படி பதவியேற்கிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் திருமதி. திரௌபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறவுள்ள இவ்விழாவில், பிரதமர் திரு. மோடி, மூத்த அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.