பாலியல் தொல்லை வழக்கில் மூத்த எழுத்தாளருக்கு முன்ஜாமின் வழங்கி கேரளா நீதிமன்றம் உத்தரவு
Aug 17 2022 5:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாலியல் ரீதியில் தூண்டும் வகையில் ஆடை அணிந்திருந்ததாக கூறி, புகார் கொடுத்த பெண், தொடர்ந்த வழக்கில் மூத்த எழுத்தாளருக்கு கேரளா நீதிமன்றம் முன் ஜாமின் வழங்கியுள்ளது.
பாலியல் தொல்லை கொடுத்ததாக கேரள மாநிலத்தை சேர்ந்த மூத்த எழுத்தாளர் சிவிக் சந்திரனுக்கு எதிராக இளம்பெண் எழுத்தாளர் புகார் தெரிவித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமின் வழங்கக் கோரி, எழுத்தாளர் சிவிக் சந்திரன், கோழிக்கோடு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அத்துடன் புகார் கொடுத்த பெண், தன் மடியில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும் அவர் இணைத்து கொடுத்தார். இந்நிலையில், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எழுத்தாளர் சிவிக் சந்திரனுக்கு முன் ஜாமின் வழங்கி, நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த தீர்ப்பு தொடர்பான உத்தரவு நகல் இன்று வெளியானது. அதில்,
முன் ஜாமின் கோரி மனுதாரர் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் இணைக்கப்பட்ட புகைப்படங்களை பார்க்கும்போது, புகார் தெரிவித்த பெண் தனது உடல் அங்கங்கள் தெரியும்படி ஆடை அணிந்துள்ளார் என்றும், அந்த ஆடை பாலியல் ரீதியில் தூண்டும் வகையில் உள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டுள்ளார். உடல் ரீதியிலான தொடர்பு இருந்தது ஒப்புக்கொண்டபோதும், 74 வயதான மாற்றுதிறனாளி நபர் புகார் அளித்த பெண்ணை தனது மடியில் வலுக்கட்டாயமாக அமரவைத்து பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக கூறுவதை நம்பமுடியவில்லை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார். ஆகையால், சட்டப்பிரிவு 354 ஏ குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பொருந்தாது என சுட்டிக்காட்டி, குற்றம்சாட்டப்பட்டவருக்கு முன் ஜாமின் வழங்கப்படுவதாகவும் நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.