குஜராத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை - ராகுல் காந்தி கண்டனம்
Aug 17 2022 5:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குஜராத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் எம்.பி. திரு.ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 11 பேரை கருணையின் அடிப்படையில் விடுவிப்பதாக குஜராத் மாநில அரசு கடந்த திங்கட்கிழமை அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி. திரு.ராகுல்காந்தியும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், பெண்ணை பாலியல் வன்மொடுமை செய்து 3 வயது பெண் குழந்தையைக் கொன்றவர்கள், சுதந்திர நாளில் விடுவிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார். பெண்களின் சக்தி குறித்துப் பேசும் இந்த நாட்டு பெண்களுக்கு இது என்ன செய்தியைச் சொல்கிறது என கேள்வி எழுப்பிய திரு. ராகுல், பிரதமர் அவர்களே, உங்கள் சொல்லுக்கும் செயலுக்கும் உள்ள வித்தியாசத்தை இந்த முழு நாடும் பார்ப்பதாக பதிவிட்டுள்ளார்.