பிகாரில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முதன்முறையாக பாட்னா சென்ற லாலு பிரசாத் யாதவுக்கு உற்சாக வரவேற்பு - முதலமைச்சர் நிதிஷ்குமார் நேரில் சந்தித்து வாழ்த்து

Aug 18 2022 11:41AM
எழுத்தின் அளவு: அ + அ -

பிகாரில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முதன்முறையாக பாட்னா சென்ற திரு. லாலு பிரசாத் யாதவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிகாரில் பாஜக கூட்டணியில் இருந்து அண்மையில் விலகிய திரு. நிதிஷ்குமார், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து கடந்த 10 ஆம் தேதி மீண்டும் முதலமைச்சரானார். லாலு பிரசாத் யாதவின் மகன்களில் ஒருவரான திரு. தேஜஸ்வி யாதவ் துணை முதலமைச்சராகவும், மற்றொரு மகன் திரு. தேஜ் பிரதாப் யாதவ் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பதவி ஏற்றனர். இந்தநிலையில், ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் முதல் முறையாக லாலு பிரசாத் யாதவ், டெல்லியில் உள்ள தனது மகளின் வீட்டில் இருந்து பாட்னாவுக்கு சென்றார். அவருக்கு ராஷ்ட்ரிய ஜனதா தள தொண்டர்களும் நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொண்டர்களின் வரவேற்பை ஏற்று லாலு பாட்னாவில் உள்ள தனது இல்லத்திற்குச் சென்றார். அங்கு சென்ற பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், லாலு பிரசாத்துக்கு மலர்களைக் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அப்போது, லாலுவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00