டெல்லியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 652 பேருக்கு தொற்று உறுதி
Aug 18 2022 11:42AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 16 ஆயிரத்து 658 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் ஆயிரத்து 652 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி, டெல்லியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 19 லட்சத்து 88 ஆயிரத்து 391 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 702 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 ஆயிரத்து 809 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேவேளை கொரோனா பாதிப்பால் கடந்த 24 மணி நேரத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்.