உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் தேசிய நெடுஞ்சாலை எண் 109-ல் நிலச்சரிவு : பாறைகள் உருண்டு விழுந்ததில் போக்குவரத்து முற்றிலும் தடை
Sep 22 2022 12:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் தேசிய நெடுஞ்சாலை எண் 109-ல் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் தர்சாலி கிராமம் அருகே பாறைகள் உருண்டு விழுந்ததில் போக்குவரத்து முற்றிலும் தடைபட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சீரமைப்பு பணி முடிந்ததும் போக்குவரத்து தொடங்கும் என ருத்ரபிரயாக் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.